திருப்பரங்குன்றத்தில் 144 தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி, பாஜகவினர் 200 பேர் கைது

2 hours ago 1

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மீறி கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடைவரைக் கோயிலான இக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதேபோல், திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்த கோயில் மற்றும் தர்காவுக்கு மத வேறுபாடின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

Read Entire Article