திருப்பதியில் சைக்கோ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!!

5 hours ago 2

திருப்பதி: திருப்பதியில் சைக்கோ மனநிலையில் உள்ள ஒருவர் கத்தியால் பலரை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கபிலதீர்த்தம் சாலையில் கத்தி, தடியுடன் ஒரு சைக்கோ 3 பேரைத் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். கபில் தீர்த்தம் வாகன நிறுத்துமிட பணியாளர் சுப்பிரமணியம், அதே பகுதியில் வசிக்கும் கல்பனா காயம் அடைந்துள்ளனர். சைக்கோ தாக்குதலில் காயமடைந்து இறந்தவர் சேகர் (55) என அலிப்பிரி போலீசார் தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் சைக்கோவை வலை வீசி தேடிய நிலையில், பிடிபட்ட சைக்கோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என அலிப்பிரி போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதியில் சைக்கோ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article