திருச்சி, மார்ச் 4: திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (37). இவர் பிப்.27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார். பிப்.1ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பிரேஸ்லெட், தோடு உள்ளிட்ட 10 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து நகை திருட்டு appeared first on Dinakaran.