சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பதவி உயர்வில் சமூக அநீதியைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி பல்கலைக்கழகப் பணிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணிக்கான பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இந்த சமூக அநீதி கண்டிக்கத்தக்கது.