திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காந்தி மார்க்கெட் வடக்கு தையக்காரத் தெருவில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்தத் தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்ம பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறிச் சென்று பார்த்தபோது, தண்ணீரில் பாலீத்தின் பையில் சுற்றப்பட்ட மனித கழிவு கிடந்தது தெரியவந்தது.