திருக்குறுங்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

3 months ago 8

களக்காடு,பிப்.7:திருக்குறுங்குடியில் புகையிலைப் பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி எஸ்ஐஆபிரகாம் ஜோசப் மற்றும் போலீசார் மேலநம்பி தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பெண், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். இருப்பினும் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மேல நம்பிதோப்பை சேர்ந்த திருமலைநம்பி மனைவி கனி (53) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பதுக்கிவைத்திருந்த தலா 15 கிராம் எடையுள்ள 45 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிந்து கனியை கைதுசெய்தனர்.

The post திருக்குறுங்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article