தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறது - செல்வப்பெருந்தகை

2 hours ago 2

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 'இந்தியா' கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.க.வினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை. எங்கள் கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும், சிதறும், அதனால் தங்களுக்கு ஆதாயம் ஏற்படும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறார்கள். எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் ஏற்படாது. எங்கள் கூட்டணி சிதறுவதற்கு நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இந்த கூட்டணி இரும்பு கோட்டை.

எங்கள் கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதனை எல்லாம் நாங்களே பேசி தீர்த்து கொள்வோம். தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.

தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன? எதற்காக நடத்துகிறார்கள்? அயோத்தியில் ராமரை நாடினார்கள். ஆனால் அங்கு பா.ஜ.க.வை ராமர் கைவிட்டு விட்டார். பா.ஜ.க. கட்சி மக்களை நம்பி இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வதுதான் அதன் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article