பாங்காக்,
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் , சீனாவின் செங் ஸிங் வாங்கிடம் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-19, 18-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷூயான் சென் சூவிடம் தோல்வி அடைந்தார்.