தாயிடம் பால் குடித்த 4 மாத ஆண் குழந்தை பரிதாப சாவு

2 days ago 2

பெரம்பூர்: தாயிடம் பால் குடித்த 4 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சென்னை கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனியார் மொபைல் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு பின்னர் தூங்க வைத்துள்ளார். இதன்பிறகு சுமார் 10 நிமிடம் கழித்து மீண்டும் குழந்தைக்கு பால் கொடுக்க குழந்தையை தூக்கியபோது அசைவற்று கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’ குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது’ என்று தெரிவித்தனர். இதனால் குழந்தையை பார்த்து பெற்றோர் கதறியது பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராஜமங்கலம் போலீசார் சென்று குழந்தையின் சடலத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

The post தாயிடம் பால் குடித்த 4 மாத ஆண் குழந்தை பரிதாப சாவு appeared first on Dinakaran.

Read Entire Article