சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.