தருமபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் வம்பு இழுத்த இளம் பெண்கள்

10 hours ago 2

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் வம்பு இழுத்த இளம் பெண்கலால் பரபரப்பு நிலவியது. தருமபுரி பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் வெளியூர் செல்வதற்காகவும், வெளியூரிலிருந்து தினமும் பொதுமக்கள் வருகின்றனர். இதனால் பொதுமக்களின் நலனுக்காக காவல் துறையினர் இரவு நேரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக வந்த இளம் பெண்கள் இருவர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். இதனை அடுத்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த பொழுது, பொதுமக்கள் காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்பொழுது காவலர்களை நோக்கி வந்த அந்த இரண்டு இளம் பெண்களும் காவலர்களிடமும் வம்பு இழுத்தனர். இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், காசிமேடு பகுதியில் இருந்து வருவதாகவும், உங்களால் என்ன செய்ய முடியும் என தேவையில்லாமல், சென்னை தமிழில் பேசி வம்பு இழுத்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த ஆண் அதாவது (public)ஒருவர் அந்தப் பெண்களிடம் பேசி உள்ளார். அப்பொழுது அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சித்துள்ளனர். பொதுமக்களிடமும் காவலர்களிடம் அந்த இரண்டு இளம் பெண்களும் நடந்து கொண்ட விதம், மது போதையில் இருந்தவர்களை போன்று இருந்துள்ளது. இது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது.

மேலும் காவலர்களிடமும் பொதுமக்களிடமும் வம்பிழுத்த இரண்டு இளம் பெண்களையும் காவலர்கள் எச்சரிக்க முடியாத அளவிற்கு அமைதியாகவே இருந்தனர். ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் தம்பதிகளா என்று கேட்டதால், பெண் வீடியோவை வெளியிட்டு வைரலானதால், காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், காவலர்கள் இந்த இளம் பெண்கள் வம்பு இழுத்த போதிலும் செய்வதறியாமல் அமைதியாகவே நின்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தருமபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் வம்பு இழுத்த இளம் பெண்கள் appeared first on Dinakaran.

Read Entire Article