ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, இங்குள்ள பெரிய புல் மைதானத்தில் ஓடியாடி விளையாடுகின்றனர். இதற்காக எப்போதும் இந்த புல் மைதானங்கள் பச்சைபசேலென பச்சை கம்பளம் விரித்தாற்போல் பராமரித்து வைக்கப்படும்.
இரண்டாம் சீசனின்போது தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்காக திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு மேலாக புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று முதல் புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல பூங்கா நிர்வாகம் அனுமதித்தது. இதனால், பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரிய புல் மைதானத்தில் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.
The post ஊட்டி பூங்கா புல் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு: சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி appeared first on Dinakaran.