தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்: அதிகபட்சமாக திருப்பத்தூர், ஈரோட்டில் தலா 102 டிகிரி கொளுத்திய வெயில்..! மக்கள் தவிப்பு

10 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதே போல் ஈரோட்டில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.58 டிகிரி, கரூரில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 5 தினங்களை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு இன்று தொடங்கிய 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்: அதிகபட்சமாக திருப்பத்தூர், ஈரோட்டில் தலா 102 டிகிரி கொளுத்திய வெயில்..! மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article