தமிழ்நாட்டில் இயல்பை விட 97 சதவீதம் அதிகம் பெய்த கோடை மழை

1 day ago 5

சென்னை,

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை.

நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை மழை 25 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 97 சதவீதம் அதிகம். சென்னையில் இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக கோடை மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தொடவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article