சந்தேகத்தால் விபரீதம்; பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியின் உடல் மீது தீவைத்த கணவர்

1 day ago 5

மும்பை,

மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்தவர் ரேகா(வயது38). வீட்டுவேலை செய்து வருகிறாா். இவரது கணவர் தினேஷ்(46). தினேசுக்கு சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தினேஷ் மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் வேலைக்கு நேரமாகிவிட்டதால் அவர் உறவுக்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக மனைவி மீது குற்றம் சுமத்தினார்.

இதனால் விரக்தி அடைந்த ரேகா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார். ஆனால் தினேஷ் மனைவி என்றும் பாராமல் அவர் மீது தீயை பற்ற வைத்தார். இதில், உடலில் தீப்பிடித்து ரேகா அலறினார்.

அவரது சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ரேகாவின் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை சயான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை தீவைத்து எரித்த தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article