தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள், உணவு கழிவு கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை? -பசுமை தீர்ப்பாயம் கேள்வி

4 months ago 7

சென்னை: தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள், உணவு கழிவு கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை? கழிவுகளை கொட்டிய மருத்துவமனை, ரிசார்ட்டை ஏன் மூடக்கூடாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கழிவுகளை கொட்டுவதை கேரளா நிறுத்த வேண்டும் எனவும் மாநில எல்லைகளில் தமிழ்நாடு அரசு பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவக் கழிவு தொடர்பான வழக்கில் கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை கேரள மாநில உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கேரள மருத்துவக் கழிவுகள், மாநில எல்லையை ஒட்டி நெல்லை, கோவை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன.

The post தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள், உணவு கழிவு கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை? -பசுமை தீர்ப்பாயம் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article