சென்னை: தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தொடர் முயற்சி நடந்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பன்னாட்டு புத்தகக்காட்சியில் 65 நாடுகளின் பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். திருக்குறளை 12 நாடுகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு உதவ மொழிபெயர்ப்புக்கு ரூ.3 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என அவர் கூறினார்.
The post தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.