சென்னை: இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களையும் அறநிலையத்துறையின் கீழ் இணைக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்துவாரா என இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் நாள்தோறும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது ஏதேனும் ஒரு விவாதம் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இந்துக்களுக்கு எதிராக அந்த துறை செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை என்ற ஒன்று இருக்காது என தொடர்ச்சியாக பேசி வருகிறார்.