தமிழகம் முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை?

2 months ago 10

மதுரை: பொதுப்பணித்துறையிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையில், நீர்நிலைகளை பராமரிக்க நிரந்தர நிதி ஆதாரம் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க இந்த நடவடிக்கை பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நீர் நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல், நீர் மேலாண்மை, வெள்ள நீரை திருப்பிவிட்டு, நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி, பாசனம், குடிநீர் மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. ஆனால், பொதுப்பணித்துறையில் நீர்நிலைகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் கண்மாய்கள், குளங்களை தூர்வாரும் பணிகள், நீர் வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் உபரி நீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் பராமரிக்கும் பணிகள் தேக்கமடைந்துள்ளது. கண்மாய்கள், குளங்களை ஆழப்படுத்தி தூர்வாரப்படாததால், தற்போது வடகிழக்கு பருவமழை காலங்களில் அவை நிரம்பாமலே மறுகால் பாய்ந்து ஓடுகின்றன.

Read Entire Article