சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேலும் வலுப்பெற்று இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து நாளை, வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் படிப்படியாக வலுக்குறையும். மேலும், தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரையில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 10ம் தேி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
The post தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.