தமிழகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பின: அணைகளின் நீர் இருப்பு 82 சதவீதமாக அதிகரிப்பு

5 months ago 19

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை. மீதமுள்ள 37 மாவட்டங்களில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 14,140 பாசன ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகள் இருக்கின்றன. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரை மாவட்டத்தில் 1,340, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,132 ஏரிகள் உள்ளன.

Read Entire Article