திருவண்ணாமலையில் பரவலான கோடை மழை சுட்டெரித்த வெயிலுக்கு ஆறுதல்

8 hours ago 2

திருவண்ணாமலை, மே 17: திருவண்ணாமலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மிதமான மழை பெய்தது. திருவண்ணாமலையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக நேற்று 100.76 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று இரவு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
அதேபோல், கலசபாக்கம் போளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்படும் பொது மக்களுக்கு, கோடை மழை ஆறுதலை அளித்துள்ளது.

The post திருவண்ணாமலையில் பரவலான கோடை மழை சுட்டெரித்த வெயிலுக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Read Entire Article