வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பாடலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தூய்மை பாரத இயக்கத்தை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, வீடு, வீடாக சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்ப திடக்கழிவு விழிப்புணர்வு குறித்த பாடல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளது.