தஞ்சாவூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

2 months ago 13

 

தஞ்சாவூா், நவ.18: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் துணை தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். பாபநாசம் வட்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் பிருந்தா, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை தாசில்தாராகவும், பாபநாசம் வட்டம் மண்டல துணை தாசில்தார் மீனா, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக கலைஞர் உரிமைத்தொகை திட்ட துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தஞ்சாவூர் கோட்ட அலுவலக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை தாசில்தார் பிராங்களின் பாபநாசம் வட்டம் மண்டல துணை தாசில்தாராகவும், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை தாசில்தார் சத்தியராஜ் பாபநாசம் வட்டம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article