சேந்தமங்கலம், பிப்.14: எருமப்பட்டி அருகே கஸ்தூரிப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(50). விவசாயியான இவரது மனைவி ராசாத்தி(45). நேற்று மாலை, இருவரும் டூவீலரில் எருமப்பட்டிக்கு புறப்பட்டனர். முட்டாஞ்செட்டி வடக்குமேடு என்னுமிடத்தில் சென்றபோது, எதிரே வந்த பால் வேன் மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராசாத்தி உயிரிழந்தார். முருகேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி appeared first on Dinakaran.