டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி; சிறுவன் படுகாயம்

1 week ago 2

கிருஷ்ணகிரி, பிப்.14: கிருஷ்ணகிரி மகராஜகடை எலுமிச்சங்கிரி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(34), விவசாயி. அதே பகுதியில் வசித்து வரும் சிரஞ்சீவி என்பவரது மகன் பரத்(5). நேற்று முன்தினம் சிவக்குமார், பரத்தை அழைத்துக்கொண்டு டூவீலரில் சென்றுள்ளார். எலுமிச்சங்கிரி- குப்பம் சாலையில் உள்ள எம்டிவி நகர் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவன் பரத்திற்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகராஜகடை போலீசார், பரத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி; சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article