டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது

4 months ago 15

 

திருச்சி, ஜன.6: திருச்சி, காட்டூர், அம்மன் நகர், 8வது கிராஸை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (32), டீ மாஸ்டர். இவர் நேற்று அரியமங்கலம் எஸ்ஐடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் செல்போனை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் ராதாகிருஷ்ணனை கல்லால் தலையில் அடித்துவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து காமராஜ் நகர், அப்துல்லா தெருவைச் சேர்ந்த ராகவேந்திரன் (24) என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

 

The post டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Read Entire Article