டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

2 months ago 13

தர்மபுரி, டிச.18: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், தர்மபுரி செங்குந்தர் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிறப்பு தலைவரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான பாரதி தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கடந்த 22 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் தினகரன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், நிர்வாகி முருகன் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article