மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்தும், கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்திற்கான ஏலத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை மக்கள் தொடர்ந்து நடத்துகின்றனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.