ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மதுரை நகரமே ஸ்தம்பித்தது - டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி

4 months ago 10

மதுரை: டங்ஸ்டன் திட்​டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதி கிராம மக்கள், விவசா​யிகள் மதுரைக்கு பேரணி​யாகப் புறப்​பட்டு வந்து, தல்லாகுளம் தபால் அலுவலகம் முன்பு பல்லா​யிரக்​கணக்​கானோர் திரண்டு போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். இதனால், ஜல்லிக்​கட்டு போராட்​டம்​போல் மதுரை நகரம் ஸ்தம்​பித்​தது.

மதுரை மாவட்​டம், மேலூர் அருகே அரிட்​டாபட்டி, அ.வல்​லா​ளபட்டி உள்ளிட்ட சுற்று​வட்டார கிராமங்கள் அடங்கிய பகுதி​யில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்​ததன் பேரில் தனியார் நிறு​வனம் ஏலம் எடுத்​துள்ளது. இதற்கு மேலூர் பகுதி​யில் கடும் எதிர்ப்​பு கிளம்​பியது. திட்​டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், விவசா​யிகள், அரசியல் கட்சி​யினர் தொடர் போராட்​டங்​களில் ஈடுபட்டு வருகின்​றனர்.

Read Entire Article