சோழிங்கநல்லூர், பல்லாவரம் கோட்டங்களுக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

2 months ago 8

சென்னை: சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம் கோட்டங்களுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம் கோட்டங்களுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில், பல்லாவரம் மின் நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின் சார்ந்த குறைகள் மற்றும் பிரச்னைகளை தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சோழிங்கநல்லூர், பல்லாவரம் கோட்டங்களுக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article