செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ்

2 months ago 7

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகின்றன. முதல் சுற்றில் வெள்ளைக் காய்களுடன் ஆடிய குகேஷ் தோற்றார். 2ம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால், 1.5-0.5 புள்ளிகள் கணக்கில், லிரென் முன்னிலை வகித்தார். இந்நிலையில், 3வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது.

இப்போட்டியில், ‘குயீன்ஸ் காம்பிட்’ என்ற டெக்னிக்கை முதன் முறையாக குகேஷ் கையாண்டார். இது, குகேசுக்கு சிறந்த பலனை தந்தது. அடுத்த காய் நகர்த்தலுக்கு லிரென் அதிக நேரம் எடுத்துக் கொள்ள நேரிட்டது. இறுதியில், 37வது நகர்த்தலின் மூலம், குகேஷ் இந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் 1 புள்ளி பெற்ற குகேஷ், 1.5 புள்ளிகளுடன் சமன் செய்துள்ளார்.

The post செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ் appeared first on Dinakaran.

Read Entire Article