
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை (17.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னீர்க்குப்பம்: கன்னபாளையம், ஆயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி.
ராமாபுரம்: ராயலா நகர் 1 மற்றும் 2வது தெரு, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, பாரதி சாலை, பாரதி நகர், ஆண்டவன் நகர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், திருமலை நகர், முகலிவாக்கம் பகுதி, சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், முகலிவாக்கம் மெயின் சாலை, காமாட்சி நகர், கிருஷ்ணவேணி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, ஏஜிஎஸ் காலனி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.