'நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை - மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு

6 hours ago 2

இந்தூர்,

இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வு, கடந்த 4-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. இத்தேர்வின் முடிவுகள், ஜூன் 14-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு மையத்தில் நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவி, மத்தியபிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மே 4-ந் தேதி, இடியுடன் கூடிய மழை பெய்ததால், தேர்வு மையத்தில் 2 மணி நேரம்வரை மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்றும், தான் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர், அடுத்த விசாரணை தேதிவரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு, மத்தியபிரதேச மேற்கு மண்டல மின்வினியோக நிறுவனம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

ஜூன் 30-ந் தேதி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இடைக்கால தடை உத்தரவு, நீட் தேர்வு எழுதிய 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Read Entire Article