சென்னை: சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடபழனியில் அடகு கடை, பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் வீரேந்திர மால் ஜெயின் என்பவரது வீடு, கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. அசோக் நகரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஐயப்பன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேப்பேரியில் பைனான்சியர் மோகன் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
The post சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.