சென்னை மாநகரத்துக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் அருண் நேற்று கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.