சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் நிதி ரூ.4 கோடியாகவும், கவுன்சிலர் நிதி ரூ.60 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ், மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: