சென்னை: பயணிகளின் சேவைக்காக ‘சாட்பாட்’ வசதியை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக துறைசார் அதிகாரிகள் கூறியதாவது: ”மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியம், நிறை, குறைகளுக்குத் தீர்வு காண பயணிகள் புகார் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் புகார்களை கட்டணமில்லா எண் 149, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.