சென்னை: பாலியல் வழக்கில் கைதாகியுள்ள அமெரிக்க குடியுரிமை பெற்ற தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சக்திவேல் என்பவர், அங்கு பணியாற்றிய இளம்பெண்ணுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு தருவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக அத்துமீறியதால், பாதிக்கப்பட்ட அந்த பெண் பணியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அந்தப்பெண் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரி சக்திவேல் மீது புகார் அளித்தார்.