சென்னை-திருநெல்வேலி இடையே இன்று விழாக்கால சிறப்பு ரயில்

3 months ago 14

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இன்று சென்னை – திருநெல்வேலி இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, ரயில் எண் (06074) திருநெல்வேலியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 10 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேரும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 29 ம் தேதி காலை 7.15 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.
இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருதங்கல், விருதுநகர், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்து கடவு, போதனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி , அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை-திருநெல்வேலி இடையே இன்று விழாக்கால சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Read Entire Article