புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளான வி.லட்சுமி நாராயணன், பி.வடமலையை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.
இதுபோல, தெலுங்கானா ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளான எல்.என்.அலிஷெட்டி, அனில் குமார் ஜுகந்தி, சுஜனா கலசிகம் ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.