செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

23 hours ago 2

சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உதாசீனப்படுத்திய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஆனைகுன்றத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்த முனுசாமி கடந்த 2001 ஜூலை 15 அன்று இறந்தார். இதையடுத்து அவரது மகன் ராஜகிரி கருணை அடிப்படையில் வாரிசு வேலை கோரி விண்ணப்பித்தார். 2001 முதல் 2006 வரை கருணை அடிப்படையில் வேலை கோர தடை இருந்ததால், 2006-ம் ஆண்டு தடை நீங்கியதும் மீண்டும் வேலை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அந்த மனு காலதாமதமாக அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இல்லை என்றும் கூறி அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

Read Entire Article