கேடிசி நகர், மே5: நெல்லை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சி உச்சிமாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தங்கம்(44). இவர் ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சூளையில் இருந்து லோடு வாகனத்தில் செங்கல் ஏற்றிக் கொண்டு கீழப்பாட்டம் வழியாக சென்றுள்ளனர். அப்போது வாகனத்தின் மேல் தங்கம் உள்ளிட்ட தொழிலாளிகள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து எதிர்பாராத வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தங்கம் உள்ளிட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்கல் லோடு லாரி கவிழ்ந்து காயமடைந்த பெண் சாவு appeared first on Dinakaran.