சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேசுகையில் “ தஞ்சாவூர் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய கோயில் பணிகள் குறித்து அமைச்சர் விவரித்தார். இந்த பேரவையில் என்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். முதலமைச்சருடைய உத்தரவின் அடிப்படையில் அந்தக் கோரிக்கையை ஏற்று பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் எப்போது நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,’’எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்த அரசினுடைய கொள்கையின்படி இந்து கோயில்களுக்கு உறுப்பினர் இஸ்லாமிய நண்பர் திருக்கோயிலுக்கு மின்தூக்கி வசதி கேட்டவுடன் முதல்வர் ஒப்புதல் அளித்து ரூ.3 கோடி 55 லட்சம் செலவில் அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரும் ஜூன் மாத இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்பெற்று நானும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து அந்த மின்தூக்கியை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஜூன் மாதத்திற்குள் கொண்டு வருவோம்” என்றார்.
The post சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி வசதி கேட்ட இஸ்லாமிய எம்எல்ஏ கோரிக்கை ஜூன் மாதம் நிறைவுபெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.