திருச்செங்கோடு, மார்ச் 19: சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பக்கமுள்ள முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்பி (எ) விஜய். இவர் கடந்த 2001 ஜூலை 7ம்தேதி, பிரிவு 197ன்கீழ், கொலை வழக்கு சம்மந்தமாக கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த இவர், இதுவரை கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, முத்தனம்பாளையம் கிராமத்தில், பொதுமக்கள் கூடும் இடத்தில், மல்லசமுத்திரம் எஸ்.ஐ., முருகேசன் நோட்டீஸ் ஒட்டினார்.
The post தலைமறைவு குற்றவாளி என அறிவிப்பு appeared first on Dinakaran.