நாகப்பட்டினம், ஜன.5: திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுaம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.திருநங்கையர் தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி திருநங்கையருக்கான முன் மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெற திருநங்கைகள் அரசு உதவிபெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேvறி இருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் ணீஷ்ணீக்ஷீபீs.tஸீ.ரீஷீஸ் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சுயசரிதை தனியரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்) விருது பெற்றிருப்பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல் முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விவர அறிக்கை, சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு வழங்க வேண்டும்.இதன் பின்னர் தலா 2 நகல்கள் தயார் செய்து கையேட்டில் இணைத்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்தில் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது appeared first on Dinakaran.