சுனில் நரைன் அபாரம்: சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

1 week ago 3

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை ஆரம்பம் முதலே கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 12 ரன்களில் மொயின் அலி சுழலில் சிக்கினார். அவரை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த விஜய் சங்கர் - ராகுல் திரிபாதி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

இருப்பினும் 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்த தப்பித்த விஜய் சங்கர் 29 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணிக்கு கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். துபே ஒரு முனையில் நிதானமாக ஆடி வர மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இந்த சரிவிலிருந்து மீள முடியாத சென்னை அணி விக்கெட்டுகளை தாரை வார்த்தது.

தொடர்ந்து அஸ்வின் ஒரு ரன்னிலும், ஜடேஜா டக் அவுட்டிலும், இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா டக் அவுட்டிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் அடித்தது. துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர்.

 

ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் ரன்கள் குவிக்கத்தொடங்கிய இந்த ஜோடியால் கொல்கத்தா அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. பின்னர் இந்த ஜோடியில் டி காக் 23 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக சுனில் நரைனுடன், ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த சூழலில் சுனில் நரைன் 44 (18) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முடிவில் ரிங்கு சிங் 15 ரன்களும், அஜிங்யா ரகனே 20 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அன்சுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் ஐ,பி.எல். தொடரின் தனது 3 வெற்றியை பதிவு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தொடர்ந்து 5 -வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article