சீர்காழி, பிப்.24: சீர்காழி புனித லூர்து அன்னை தேவாலயத்திற்கு வருகை தந்த மேதகு ஆயர் சகாயராஜ் ஆலயத்தில் சிறப்பு பாடல் திருப்பலி நிறைவேற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை தேவாலயத்திற்கு தஞ்சாவூர் மறை மாவட்டத்தில் புதியதாக பொறுப்பு ஏற்ற சகாயராஜ் ஆயர் வருகை புரிந்தார். அப்போது சீர்காழி பங்குத்தந்தை டோனி அமுல்ராஜ் தலைமையில் பங்கு உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆயர் சகாயராஜ் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பாடல் திருப்பலி நடத்தி வைத்து அன்பின் விழாவை சிறப்பித்தார்.
விழாவில் பல்வேறு தந்தையர்கள் அன்பிய தலைவர்கள், பங்கு மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சீர்காழி பங்குத்தந்தை டோனி அமுல்ராஜ் மற்றும் பங்கு மன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் செய்தனர்.
The post சீர்காழி புனித லூர்து அன்னை தேவாலயத்திற்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் வருகை appeared first on Dinakaran.