சிவகாசியில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி: சக போலீசார் வழங்கினர்

3 months ago 9

 

சிவகாசி, பிப்.15: மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. சிவகாசியை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் கடந்த 2009ம் ஆண்டு போலீசில் சேர்ந்தார். இவருக்கு சக்தீஸ்வரி என்ற மனைவியும், சாரலினியா, மகிழினியா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மாரிசெல்வம் கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ் குழு சார்பில் நிதி திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட நிதியை மாரிசெல்வத்தின் மனைவி சக்தீஸ்வரி மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்ச்சி சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் 2009ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள் சிலர் கலந்து கொண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.25 லட்சத்தை வழங்கினர்.

The post சிவகாசியில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி: சக போலீசார் வழங்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article