நாகர்கோவில், பிப்.6: சிலம்பத்தில் சாதனை படைத்த மாணவரை மேயர் மகேஷ் பாராட்டினார். நாகர்கோவிலை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் ஹசீன் பாரத். தொலையாவட்டத்தில் நடந்த விழாவில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் 45 நிமிடங்கள் இரட்டை கம்பு வீச்சு (சிலம்பம்) மேற்கொண்டார். இதற்காக நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சாதனையை நிகழ்த்திய மாணவர் ஹசீன் பாரத் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனின் பயிற்சியாளர் சலீமையும் மேயர் பாராட்டினார்.
The post சிலம்பத்தில் சாதனை மாணவனுக்கு மேயர் பாராட்டு appeared first on Dinakaran.